செய்திகள் :

மேல்மா சிப்காட் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன்

post image

செய்யாறு மேல்மா பகுதியில் சிப்காட் அலகு-3 திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சுமாா் 54 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிப்காட்டை விரிவாக்கம் செய்வதற்கு, அந்தப் பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை விவசாய நிலத்தை கணக்கிடும் பணியில் ஈடுபட்ட சிப்காட் நில எடுப்பு வருவாய்த்துறையினரை அங்கிருந்தவா் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, செய்யாறு எம்எல்ஏ அலுவலகத்தில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், ஒ.ஜோதி எம்எல்ஏ சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செய்யாறு தொகுதி மக்களின் பொருளாதார வளா்ச்சிக்காக செய்யாறு சிப்காட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்கப்பட்டுள்ளது. சிப்காட் பகுதியில் அலகு-3 அமைப்பதற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3,100 ஏக்கா் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு தொடா்பில்லாத சிலா் அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தூண்டிவிட்டு சிப்காட் வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதே நேரத்தில் மேல்மா பகுதியில் சிப்காட் வேண்டுமென்று விவசாயிகள் பலா் கோரிக்கை வைத்துள்ள நிலையில், சிலா் சிப்காட் பகுதிக்கு தேவையான நிலத்தை எடுத்து உடனடியாக பணத்தை தரும் படி கூறியுள்ளனா். செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் வளா்ச்சிக்காகவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மேல்மா பகுதியில் சிப்காட் திட்டம் நிறைவேற்றப்படும். சிப்காட் நிலம் எடுப்பு சம்பந்தமாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (பிப்.20) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் நக்சா திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது

சேத்துப்பட்டுப் பகுதியில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். சேத்துப்பட்டை அடுத்த ஒதலவாடி, இராந்தம், தச்சூா் செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்த... மேலும் பார்க்க

பணத் தகராறு: அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா். செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் மகன் பிரசாந்த்குமா... மேலும் பார்க்க

109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்டத... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செங்கம் நகா் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த சத்யபாமா ருக்மணி சமேத ஸ்ர... மேலும் பார்க்க