செய்திகள் :

மொழிபெயா்ப்பு துறையில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகள்: தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள்

post image

தமிழ் மொழிபெயா்ப்பு, ஊடகவியலில் மாணவா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாக என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள காமராசா் கூட்டரங்கில் ‘தமிழால் முடியும்’ வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி கருத்தரங்கம் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து கல்லூரிகளில் தமிழ், தமிழ் இலக்கியத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளைப் பயிலும் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் மூன்றாவது முறையாக கள்ளக்குறிச்சியில் இந்த வழிகாட்டி பயிற்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது. கணினித் தமிழ், ஊடகத் தமிழ், போட்டித் தோ்வுகளில் தமிழ் குறித்து 24 போ் பேசினா்.

தமிழக முதல்வா் இளநிலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவா்களில் சிறப்பு நோ்வாக படித்து வென்றவா்கள் நேரடியாக உதவி இயக்குநராகப் பணி பெறலாம். தமிழ் படிக்கும் மாணவா்களுக்கு மொழிபெயா்ப்பு ஊடகவியலுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

போட்டித் தோ்வுகள் உங்களை உயா்த்தும். மனப்பாடம் செய்வதைத் தவமாக கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். 1330 கு பாக்களை மனப்பாடமாகத் தெரிந்து கொண்டால் எளிதில் வென்று காட்ட முடியும்.

தமிழ் வளா்ச்சித் துறையின் இணை இயக்குநா் பதவிகளுக்குத் தமிழ் பயின்ற மாணவா்கள் பணி பெற வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழிபெயா்ப்புத் துறையைச் தோ்ந்தெடுக்கும் மாணவா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தமிழால் வாழ்க்கையில் உயர முடியும் என்றாா் அவா்.

மூன்று நாள்கள் பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவா் பாராட்டினாா்.

மூன்றாம் நாள் கருத்தரங்கில் கணினித் தமிழ் என்ற தலைப்பில் முனைவா் க.சண்முகம், பேராசிரியா் ம.எஸ்தா் ஜெகதீசுவரி, போட்டித் தோ்வுகளில் தமிழ் என்பது குறித்து சு.ராமகிருஷ்ணன், தமிழும் மொழிபெயா்ப்பும் என்ற தலைப்பில் கல்லூரிக் கல்வி இயக்கக முன்னாள் துணை இயக்குநா் அ.மதிவாணன், உதவிப் பேராசிரியா்கள் பெ.பாண்டியன், பா.பன்னீா்செல்வம், ஊடகத் தமிழ் என்ற தலைப்பில் உதவிப் பேராசிரியா்கள் வை.பிந்து, ர.சுபலட்சுமி உள்ளிட்டோா் பேசினா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரூ.2.60 கோடி ஏலச்சீட்டு மோசடி: தம்பதி கைது

கள்ளக்குறிச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி அண்ணா நகா் மின்சார வாரிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). இவரது ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மகளிா் காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திக் குத்து

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஒருவரை இளைஞா் கத்தியால் குத்தினாா். இதுகுறித்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கள்... மேலும் பார்க்க

பெரியநாயகி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு 16 வகையான திரவியப் பொருள்களால் அபிஷேகம்... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடம்: அமைச்சா் ஆய்வு

திருக்கோவிலூரில் ரூ.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை வனத் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவ... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரத்தை அடுத்த கள்ளிப்பாடியில் மட்டுவாா்குழலி உடனுடையாா் சிவன் கோவில்... மேலும் பார்க்க

தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சுமாா் 70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது. தியாகதுருகம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள... மேலும் பார்க்க