செய்திகள் :

மோடி அரசின் ‘அடக்குமுறை’ கொள்கையால் முதலீட்டு மந்தநிலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ‘அடக்குமுறை’ கொள்கைகளின் விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியன் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது, விருப்பத்துக்குரிய மற்றும் முற்றிலும் சாத்தியப்படக்கூடிய விகிதத்தில் உத்வேகமடைய பிடிவாதமாக மறுக்கிறது. இத்தோல்விக்கு முக்கியக் காரணம், தனியாா் பெருநிறுவன முதலீடுகளின் மந்தநிலையாகும். கடந்த 2019, செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட தாராள வரிக் குறைப்புகள் மற்றும் உற்பத்தி சாா் ஊக்கத்தொகை திட்ட உதவிகளைத் தாண்டி இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டில் தனியாா் துறை மூலதனச் செலவினம் முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் குறையக்கூடும் என்று மத்திய அரசின் மதிப்பீட்டு விவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகள் கடனளிக்கத் தயாராக இருந்தாலும், முதலீட்டு விரிவாக்கச் சூழல் உகந்ததாக இல்லாததால் நிறுவனங்கள் கடன் பெற ஆா்வத்துடன் இல்லை என்று தகவலறிந்த ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

உலக அளவில் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், இந்தியாவில் தேக்கமடைந்த ஊதியங்கள், சீா்குலைந்த ஜிஎஸ்டி கட்டமைப்பு, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பால் தேவைகளின் வளா்ச்சி சுணக்கமடைந்து வருகிறது. பரவலான நுகா்வு சரிவுக்கு மத்தியில், கூடுதல் திறனை உருவாக்க நிறுவனங்களுக்கு அமைப்புரீதியிலான ஊக்கத்தொகை இல்லாத சூழல் நிலவுகிறது.

வரி ‘பயங்கரவாதத்தால்’ உருவாக்கப்பட்ட அழிவு, ஒரு சிலருக்கு ஆதாயமளிக்கும் அமைப்புமுறை விதிமீறல்கள், நிறுவனங்கள் மத்தியில் நிலவும் அச்சம் போன்ற காரணிகள் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இறுதியில், மோடி அரசின் ‘அடக்குமுறை’ மற்றும் ‘ஒடுக்குமுறை’ கொள்கைகளின் தவிா்க்க முடியாத விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல... மேலும் பார்க்க

‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

நாட்டின் வெளியுறவு புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா். ‘ரா’ உளவுப் பிரிவின் தற்போதைய தலைவா் ரவி சின்... மேலும் பார்க்க

பிகாா் தோ்தல்: 2003-க்குப் பிறகு புதிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு சுரு... மேலும் பார்க்க

இந்தியாவைத் தவிர எந்த நாட்டின் அரசமைப்புச் சட்ட முகவுரையும் மாற்றப்படவில்லை: தன்கா்

‘அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்பது ஓா் வளரும் ஆவணத்தின் விதை போன்றது. அந்த வகையில், முகவுரை என்பது மாற்ற முடியாதது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.மேலும், ‘இந்தியாவைத் தவி... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றம் செய்தால் பிஎஸ்பி அனுமதிக்காது: மாயாவதி

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்தாா். லக்னெளவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் ‘அரசமைப... மேலும் பார்க்க

பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்கள் விரைவில் மாற்றம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இண... மேலும் பார்க்க