ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர்..! வரலாற்று சாதனை!
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரள அணி வலுவான நிலையில் உள்ளது.
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரளா, குஜ்ராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் கேரள அணி 2ஆம் நாள் முடிவில் 418/7 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் முகமது அசாரூதின் 149* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
கேரள அணியில் சச்சின் பேபி 69, சல்மான் நிஜார் 52 ரன்களும் எடுத்தார்கள்.
குஜ்ராத சார்பில் அர்ஜன் நாக்வாஸ்சல்லா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இது அசாரூதினின் 2ஆவது முதல்தர சதமாகும். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
303 பந்துகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 17 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் இவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கேரளாவின் ஸ்கோர் கார்டு
அக்ஷய் சந்திரன் - 30
ரோஹன் குன்னம்மல் - 30
வருண் நாயனார் - 10
சச்சின் பேபி - 69
ஜலஜ் சக்சேனா - 30
முகமது அசாரூதின் - 149*
சல்மான் நிஜார் - 52
அஹ்மது இம்ரான் - 24
ஆதித்யா சர்வாத் -14*
Leading the charge, Mohammed Azharuddeen scripts history with a brilliant 149* off 303 balls, becoming the first Malayali player to score a century in a Ranji Trophy semi-final! #ranjitrophy#kca#keralacricketpic.twitter.com/gD0Zdazwkp
— KCA (@KCAcricket) February 18, 2025