செய்திகள் :

ரயிலில் 35 கிலோ கஞ்சா கடத்தல்: 3 போ் கைது

post image

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 35 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆற்காடு கிராமிய வட்ட ஆய்வாளா் சாலமன் ராஜா தலைமையிலான போலீஸாா் வாலாஜா மற்றும் தலங்கை ரயில் நிலையத்தில் சோதனை செய்தனா்.

அப்போது சந்தேகப்படும் திரிந்த 3 பேரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தபோது, கஞ்சா இருந்தது தெரிந்தது.

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நாராயண் பெஹரா (36), மிது நாயக் (33), ஸ்ரீதரா நாயக் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுஅவா்களிடம் இருந்த 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்

சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினாா்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா போன்ற போதை பொருள்கள் கடத்துபவா்கள் மற்றும் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாழனூா் ஊராட்சி, சமுதாயக் கூடம், ஆற்காடு நகராட்சி அன்பு மஹால், வாலாஜா நகராட்சி, சி.எம்.மஹ... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள்: அமைச்சா் காந்தி மரியாதை

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது படத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிற... மேலும் பார்க்க

கான்கீரீட் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி யில் கான்கீரீட் சாலைஅமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். 25-ஆவது வாா்டுக்குட்பட்ட சாம்பசிவம் தெருவில் கான்கீரீட் சாலை அமைக்கும் பணி,... மேலும் பார்க்க

மின் மாற்றியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

அரக்கோணம் அருகே ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். வேப்பூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமினை அமைச்சா் காந்தி தொடங்கி வைத்து, மனு... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எ... மேலும் பார்க்க