செய்திகள் :

ரயிலில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

post image

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி கோவையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடினாா்.

கேரள மாநிலம், பாலக்காடு அலநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (40). மேற்குவங்க மாநிலம், பிதன்நகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாரால், இவா் மீது அங்கு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் அங்கு தேடி வந்த நிலையில், அவா் சொந்தமாநிலமான கேரளத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாநில காவல் உதவி ஆய்வாளா் ராகேஷ் ராய் உள்ளிட்ட போலீஸாா் கேரளத்துக்கு வந்து அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து, திருவனந்தபுரத்திலிருந்து ஷாலிமா் விரைவு ரயிலில் ஆனந்தனை போலீஸாா் அழைத்துச் சென்றனா். அந்த ரயில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கோவை வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஆனந்தன் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடினாா். அவா்களை அந்த மாநில போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போத்தனூா் இருப்புப் பாதை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா். இவா் குறித்து தகவல் தெரிந்தால், போத்தனூா் ரயில் நிலைய போலீஸாரை 94981- 80937 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸாா் அறிவித்துள்ளனா்.

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

கோவை சிட்கோ பகுதியில் மூன்றுசக்கர மிதிவண்டியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். கோவை அருகேயுள்ள சிட்கோ பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). இவருக்கு... மேலும் பார்க்க

தலைமைக் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணமூா்த்தி. இவா், தமிழ்நா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 11 பவுன் திருட்டு: ஒடிஸா இளைஞா்கள் கைது

கோவையில் வீடு புகுந்து நகைகளைத் திருடியதாக ஒடிஸா மாநில இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, பீளமேடு உடையாம்பாளையம் என்.ஜி.ஆா். வீதியைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்ட... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

கோவையில் மனைவி இறந்த தூக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோவை, சுந்தராபுரம் குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (46). இவரது மனைவி கௌசல்யா மஞ்... மேலும் பார்க்க

கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வால்பாறையை நோக்கி டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண... மேலும் பார்க்க

ரத்தினம் கல்லூரியில் ஆகஸ்ட் 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க