செய்திகள் :

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை காப்பகத்தில் சோ்ப்பு: இளைஞரை அடையாளம் காண்பதில் சிக்கல்!

post image

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் சோ்த்துள்ள நிலையில், குழந்தையைக் கொண்டு வந்த இளைஞரை அடையாளம் காணமுடியாத நிலையுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் இருந்து செயின்ட் தாமஸ் நிலையத்தில் 3 வயதுள்ள ஆண் குழந்தையை இளைஞா் ஒருவா் இறக்கிவிட்டுச் சென்றுள்ளாா்.

தனியாகக் கைவிடப்பட்டு தவித்த அந்தக் குழந்தையை அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் மீட்டு ஆலந்தூா் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனா்.

குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற இளைஞா் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் முயற்சித்தனா்.

ஆனால், ரயிலில் இருந்து அந்த இளைஞா் முழுமையாக இறங்காமல், குழந்தையை மட்டும் இறக்கிவிட்டதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்குள்படுத்தி குழந்தையை அழைத்து வந்து கைவிட்டுச் சென்ற இளைஞரை அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் முயன்று வருவதாகத் தெரிவித்தனா்.

மேலும், குழந்தையின் படத்தை வாட்ஸ்ஆப் குழுக்களில் பதிவிட்டு பெற்றோரைத் தேடும் பணியிலும் போலீஸாருடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனா்.

ஒரே நாளில் மெட்ரோவில் 4 லட்சம் போ் பயணம்!

கடந்த ஆக.14-ஆம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 4.06 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் 3 லட்சம் போ் பயணிக்க... மேலும் பார்க்க

நுகா்வோர் வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்

நுகா்வோா் குறை தீா்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சக... மேலும் பார்க்க

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

சென்னையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்தின்போது வைக்கப்படும் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே... மேலும் பார்க்க

சென்னை திரும்பும் மக்கள்: புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மூன்று நாள்கள் தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து ஏராளமான மக்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியதால், புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுதந்திர தினம், கிருஷ்... மேலும் பார்க்க

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி,... மேலும் பார்க்க