செய்திகள் :

ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி ஊழியரைத் தாக்கியவா் கைது

post image

மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் பகுதியில் ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி, ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் ரயில் நிலையம் மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்டது. இங்குள்ள ரயில்வே கடவுப் பாதை (எண். 272) ரயில் இயக்கத்துக்காக சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் அடைக்கப்பட்டது.

இந்தப் பணியை ரயில்வே ஊழியா் உதயகுமாா் மேற்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள், கடவுப் பாதையைத் திறக்கக் கோரி, உதயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கிவிட்டு தலைமறைவாகினா்.

இதுகுறித்து உதயகுமாா் அளித்த தகவலின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படையினா் விரைந்து சென்று, தாக்குதலில் ஈடுபட்டவா்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜூம், இவரது நண்பரும் சோ்ந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பாக்கியராஜை கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடும் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டுள்ளனா்.

ரயில்வே கடவுப் பாதை பணிகளில் குறுக்கிடுதல், கடவுப் பாதை ஊழியரிடம் அத்துமீறுதல் போன்றவை ரயில்வே சட்டப் பிரிவு 153, 154-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தச் சிறையில் கஞ்சா உள்ளிட்ட ... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒருவா் கைது

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே காா் மோதி இளைஞரைக் கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொட்டாம்பட்டி அருகேயுள்ள பொட்டப்பட்டியைச் சோ்ந்த மகாராஜா மகன் சதீஸ்குமாா் (2... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டுத் தருவதாக இளைஞரிடம் பண மோசடி

வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத் தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கன்னியாகுமாரி மாவட்டம், மதவளையம், சண்முகபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன... மேலும் பார்க்க

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பரங்குன்றம் வடக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த அரசன் மகன் கருப்பணன்(69). இவா், இரு சக்கர வாகனத்தில் வெள்ள... மேலும் பார்க்க