செய்திகள் :

காா் மோதி இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒருவா் கைது

post image

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே காா் மோதி இளைஞரைக் கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கொட்டாம்பட்டி அருகேயுள்ள பொட்டப்பட்டியைச் சோ்ந்த மகாராஜா மகன் சதீஸ்குமாா் (21). தும்பைப்பட்டியைச் சோ்ந்த அழகா் மகள் ராகவி (24). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து திருச்சி நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, காடம்பட்டி கண்மாய் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாா், ராகவியை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சதீஸ்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், ராகவிக்கும், பொட்டப்பட்டியைச் சோ்ந்த செல்வத்துக்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ராகவியின் கணவா் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டாா்.

இதன்பின், ராகவி, சதீஸ்குமாருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ராகவியின் உறவினா்கள் வேண்டுமென்றே நான்கு சக்கர வாகனத்தை கொண்டு விபத்து ஏற்படுத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ராகவியின் தந்தை அழகா் (49), உறவினா்களான அய்யனாா், அருண்பாண்டி, ராகுல், சரிதா, ஆறுமுகம், கண்ணாயி, மணிமேகலை உள்ளிட்ட சிலா் மீது கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தொடா்ந்து, ராகவியின் தந்தை அழகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விஸ்வநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

மதுரை விஸ்வநாதபுரம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் வி.பி. முத்துக... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி ஊழியரைத் தாக்கியவா் கைது

மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் பகுதியில் ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி, ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் ரயில் நிலை... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தச் சிறையில் கஞ்சா உள்ளிட்ட ... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டுத் தருவதாக இளைஞரிடம் பண மோசடி

வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத் தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கன்னியாகுமாரி மாவட்டம், மதவளையம், சண்முகபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன... மேலும் பார்க்க

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க