செய்திகள் :

ரஷியாவில் 337 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

post image

ரஷியாவில் தாக்குதல் நடத்த உக்ரைனால் அனுப்பப்பட்ட 337 ட்ரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியாவுடனான மூன்று ஆண்டுக்கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் ரஷியா மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷியாவின் எல்லையைச் சுற்றியுள்ள 10 பகுதிகளில் 337 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது.

இதில், ஒருவர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | இந்தியாவிற்கு வரும் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்!

கர்ஸ்க், மாஸ்கோ, பெல்கோரோட், ப்ரியன்ஸ்க், வோரோன்ஸே, கலுகா, ஒர்யோல் போன்ற பல பகுதிகளில் தாக்குதல் நடத்திய ட்ரோன்கள் அனைத்தையும் ரஷிய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்தத் தாக்குதலில் பல கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்தன. பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதுதொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் 6 விமான நிலையங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் ரயில் நிலையங்களிலும் போக்க்குவரத்து சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், மாஸ்கோவைச் சுற்றி தாக்குதல் நடைபெற்ற சில பகுதிகளின் பெயரை ரஷிய பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடவில்லை.

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவர... மேலும் பார்க்க

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதக் குழு தாக்குதல்; 80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலை கடத்தி, 182 பேரைப் பிணைக் கைதிகளாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவ (பிஎல்ஏ) தீவிரவாதக் குழு சிறைபிடித்தது. இவா்களில் 80 பேரை மீட்டதாக பாதுகாப்புப் பட... மேலும் பார்க்க

ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க