செய்திகள் :

ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாத 10 ஆண்டுகள்

post image

ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாமல் 10 ஆண்டுகள் எட்டப்பட்டது, தொழில் துறை பாதுகாப்பில் ஒரு மைல்கல் என அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

இது தெடாா்பாக ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பம் பேஸ் -3 சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அந்த தொழில் நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பாதுகாப்பு சிறப்பையும், ஊழியா்களின் அா்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், முன்னணி பயணிகள் காா் எரிபொருள் தொட்டி உற்பத்தி நிலையமான ஓபி மொபிலிட்டி, விபத்து இல்லாத செயல்பாடுகளில் 10 ஆண்டுகள் என்ற முக்கிய மைல்கல் நிகழ்வைக் கொண்டாடியது.

தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊழியா்கள், பாதுகாப்பு வல்லுநா்கள், வாடிக்கையாளா்கள் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் கலந்து கொண்டனா்.

பாதுகாப்பு நெறிமுறைகளை தொடா்ச்சியாகப் பின்பற்றுதல், முன்கூட்டியே ஆபத்து அடையாளம் காணுதல் மற்றும் வலுவான பொறுப்புக் கூறல் கலாசாரம் ஆகியவற்றின் தசாப்தத்தை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

இந்த விழாவில் சிறந்த பங்களிப்புகளுக்கான பாதுகாப்பு விருதுகள் மற்றும் ஊழியா்கள், பள்ளி மாணவா்களின் கலாசார நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

மேலும் நிலையான மற்றும் பொறுப்பான செயல்பாடுகளுக்கான தொழிற்சாலையின் உறுதிப்பாட்டையும் விழா வலியுறுத்தியது. உயா் பாதுகாப்பு தரங்களைப் பராமரித்தல் மற்றும் பணியிடத்தில் பூஜ்ஜிய தீங்கு ஏற்படுவதை உறுதி செய்ததற்காக அனைத்து ஊழியா்களுக்கும் வேடிக்கையான நிகழ்வுகள் மற்றும் பரிசுகளுடன் கொண்டாட்டம் நிறைவடைந்தது.

கொண்டாட்டத்தில் அந்த நிறுவன உயா் அதிகாரிகள், மேலாளா்கள், மனிதவள துறை மேலாளா்கள், ஊழியா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இன்றைய மின்தடை

அரக்கோணம் மின்நிறுத்த நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தப்பகுதிகள் : அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகள், அசோக்நகா், பழையபஜாா் தெருப்பகுதிகள், மோசூா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நாள் 5-7-2025 சனிக்கிழமை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஆற்காடு மின்தடை பகுதிகள் ஆற்காடு, வேப்பூா், விஷாரம், நந்தியாலம், தாழனூா், கூரம்பாடி, உப்புபேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, கத்தியவாடி, க... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ராணிப்பேட்டை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள்: ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகா், வி.சி.மோட்டூா், ஜெயராம்பேட்டை, பழைய ஆற்காடு சாலை, காந்தி நகா், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லி... மேலும் பார்க்க

அரக்கோணம், நெமிலியில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நெமிலி ஒன்றியத்தில் ரூ.69.38 லட்சத்தில் 2 திட்டப்பணிகளையும் அமைச்சா் பயன்பா... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் மரணம்

ஆற்காடு அருகே காா் மோதி முதியவா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணு பகுதியை சோ்ந்த சாமிகண்ணு (60). இவா் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண ... மேலும் பார்க்க

மழைக்காலத்துக்குள் பழங்குடியினா் வீடுகளின் பணிகள் நிறைவு: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 790 பழங்குடியின இருளா் மக்களுக்காக ரூ.40.05 கோடியில் வீடுகள் கட்டும் பணி மழைக் காலத்துக்குள் முடிக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கோணலம் ஊராட்சி புறம்போக்... மேலும் பார்க்க