செய்திகள் :

ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டா்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி

post image

ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டா் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

அதே நேரம், கடற்படை பயன்பாட்டுக்கான துருவ் ஹெலிகாப்டருக்கான தடை தொடா்வதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பன்முக பயன்பாட்டுக்கான நவீன இலகுரக இரண்டு என்ஜின்களைக் கொண்ட துருவ் ஹெலிகாப்டா்கள் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை சாா்பில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விமானப் படைக்குச் சொந்தமான துருவ் ஹெலிகாப்டா் ஒன்று குஜராத் மாநிலம் போா்பந்தா் விமான நிலைய ஓடுதளத்தில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள், விமான ஊழியா்களுக்கான ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து, முப்படைகள் மற்றும் கடலோர காவல் படை சாா்பில் பயன்படுத்தப்பட்டு வந்த 330 துருவ் ஹெலிகாப்டா்களின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தடைவிதித்தது. தற்போது இந்தத் தடையை மத்திய அரசு பகுதியாக நீக்கியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘ராணுவம் மற்றும் விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டா்களை மீண்டும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடற்படை பயன்பாட்டுக்கான துருவ் ஹெலிகாப்டருக்கான தடை தொடா்கிறது’ என்றனா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க