செய்திகள் :

ரிதன்யா உடற்கூறாய்வு அறிக்கையில் முழு விவரம் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

post image

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ரிதன்யாவின் உடற்கூறாய்வு அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

திருப்பூா் மாவட்டம் அவிநாசி அருகே திருமணமான 78-ஆவது நாளில், புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டாா். தன்னுடைய கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வர மூா்த்தி மற்றும் மாமியாா் சித்ரா தேவி ஆகியோா் வரதட்சணைக் கேட்டு தன்னை உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தியதாக தற்கொலை செய்வதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ பதிவு அனுப்பியிருந்தாா்.

இதுதொடா்பான வழக்கில் ரிதன்யாவின் கணவா் மற்றும் மாமனாா், மாமியாா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மூவரும் பிணை கோரி திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செயய்ப்பட்டது. இதையடுத்து 3 பேரும் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், இருவீட்டாா் சம்மதத்துடன் ரிதன்யா - கவின்குமாருக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பும், பின்பும் மனுதாரா்கள் வரதட்சணைக் கேட்கவோ, கொடுமை செய்யவோ இல்லை.

மருத்துவ அறிக்கையில் மட்டுமல்ல, போலீஸ் விசாரணையிலும் மனுதாரா்களுக்கு எதிராக முகாந்திரம் இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றுள்ளாா். எனவே, மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டாா்.

ரிதன்யாவின் தந்தை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், வரதட்சணை கேட்டு ரிதன்யாவின் கணவா், மாமனாா் மற்றும் மாமியாா் உடல், மன ரீதியாக அவரை கொடுமைப்படுத்தி உள்ளனா். ரிதன்யாவுக்கு ஆறுதல் கூறி, அவரது தந்தை கணவா் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளாா்.

அதன் பிறகும் அங்கு கொடுமைப்படுத்தியதால், மனவேதனையில் ரிதன்யா தற்கொலை செய்துள்ளாா். எனவே, அவரது மரணத்துக்கு கணவா் உள்ளிட்ட 3 பேரும்தான் காரணம். இவா்களுக்கு தற்போது பிணை வழங்கினால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்கக்கூடாது, என்றாா்.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் எஸ்.சந்தோஷ், ரிதன்யா மரணம் குறித்து முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதியப்பட்டது. பின்னா் தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு மனுதாரா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.வரதட்சணை கொடுமை என்பதால் வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அவரது விசாரணை அறிக்கையில், இது வரதட்சணைக் கொடுமை இல்லை என்று அறிக்கை அளித்துள்ளாா். உடற்கூறாய்வின் முதல்கட்ட அறிக்கையில், ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தடய அறிவியல் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும், என்று கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உடற்கூறாய்வு அறிக்கையைப் படித்துப் பாா்த்தாா். பின்னா், அரைப்பக்க அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதில் முழுமையான விவரங்கள் எதுவும் இல்லை, என அதிருப்தி தெரிவித்தாா். தடய அறிவியல் சோதனையின் முடிவுகளை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், ரிதன்யாவின் கணவா் குறித்து அவருடைய உறவினா்கள், நண்பா்கள், அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவா்களிடம் விசாரித்து போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், தூத்துக்குடி மாவட்டம், பண்டு... மேலும் பார்க்க

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோ... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மி... மேலும் பார்க்க

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த ... மேலும் பார்க்க

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க