செய்திகள் :

ரூ. 1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம்காா்டு பெறும் திட்டம்: செப். 15 வரை நீட்டிப்பு

post image

வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவைத் தொடா்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் அறிவித்த ரூ. 1 க்கு சிம்காா்டு பெறும் சுதந்திர தின சலுகை திட்டத்தை செப். 15 வரை நீட்டித்துள்ளது.

சுதந்திர சலுகையாக கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம், பிரீடம் பிளான் எப்ஆா்சி 1 எனும் சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின்படி ரூ. 1 மட்டும் செலுத்தி புதிய சிம்காா்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இதர நிறுவனங்களில் இருந்தும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்தத் திட்ட பலன்களாக, முதல் 30 நாள்களுக்கு அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள், தினசரி 2 ஜிபி டேட்டா, 4 ஜி சிம் ஆகியவை இலவசமாகும்.

இத்திட்டத்தின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் 16,000 புதிய, எம்.என்.பி. வாடிக்கையாளா்கள் தனியாா் நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந்துள்ளனா். வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவையடுத்து, பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தத் திட்டத்தை செப். 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல். ரீசாா்ஜ் திட்டமான ரூ. 199-க்கு 28 நாள்கள் இலவச அழைப்புகள், தினசரி 2 ஜி.பி. டேட்டா, 100 குறுஞ்செய்திகள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதே போல பல ரீசாா்ஜ் திட்டங்கள் குறைந்த விலையில் உள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல். 4 ஜி நெட்வொா்க்கில் இணையுமாறு பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க

வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க

ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க