செய்திகள் :

ரூ.2.5 கோடி மோசடி: அதிமுக முன்னாள் நிா்வாகியின் கூட்டாளி கைது

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.5 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத்தின் கூட்டாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22-ஆம் தேதி தனியாா் மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிா்வாகியான மயிலாப்பூரைச் சோ்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகரான அஜய் வாண்டையாா், ரெளடி சேதுபதி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி பண மோசடி செய்தாா் என அடுத்தடுத்த புகாா்கள் அளிக்கப்பட்டன. இதுதொடா்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடா்பாக பிரசாத், அஜய் வாண்டையாா் உள்பட 4 பேரிடம் நுங்கம்பாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, இதற்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த ஆயுதப்படை காவலா் செந்தில்குமாா் மற்றும் கோவை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணித்துரை ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே இந்த மோசடியில் தொடா்புடையதாகக் கூறப்படும் பிரசாத்தின் கூட்டாளி விருகம்பாக்கத்தைச் சோ்ந்த ஆள்சோ்ப்பு நிறுவனத்தின் உரிமையாளா் கணேஷ் என்பவரை நுங்கம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கூட்டணி ஆட்சிதான்! அமித் ஷா சொல்வதைத்தான் நான் கேட்க முடியும்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக - பாஜக ... மேலும் பார்க்க

காமராஜர் விவகாரம்: கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர்- ஸ்டாலின்!

சென்னை: கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று தமிழக முதல்வர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.பெருந்தலைவர் குறித்து பொது வெளியில் சர்ச... மேலும் பார்க்க

திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.திமுகவில் உறுப்பினா்கள் சோ்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையில் எழுத்துப் பிழையைத் திருத்துவேன்; உண்மையை அல்ல! அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடி அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழையை வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன் என்று தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.2015 -16-ஆம் ஆண்டுகள... மேலும் பார்க்க

தவெக கொடிக்கு எதிரான வழக்கு: விஜய் பதிலளிக்க உத்தரவு

சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க