செய்திகள் :

ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது!

post image

சராய் காலே கான் பேருந்து முனையத்தில் இருந்து தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிய தம்பதியினரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 49 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

அந்த ஆட்டோ ஓட்டுநரின் பெயா் வாசிம் என்றும் அவா் மீது காந்தி நகா் காவல் நிலையத்தில் ஏற்கெனவே குற்றவாளிகளின் பட்டியலில் இருப்பசாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா். ஜூன் 27 ஆம் தேதி சராய் காலே கான் முனையத்திலிருந்து ஒரு தம்பதியினா் வாசிமின் ஆட்டோவில் ஏறினா்.

சிறிது தூரம் வாகனம் ஓட்டிய பிறகு, வாகனம் பழுதடைந்ததைப் போல நடித்து, தம்பதியினரை மற்றொரு ஆட்டோவுக்கு மாற்ற ஏற்பாடு செய்தாா் வாசிம். ஏற்கெனவே சக பயணிகளாக நடித்து அவரது கூட்டாளிகளால் தங்க நகைகள் திருடப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதனையடுத்து ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸ் குழு ஜூலை 10 ஆம் தேதி தில்லியில் இருந்த வாசிமை கைது செய்தது. அவரிடமிருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் ரூ. 11,000 போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த திருட்டில் ஈடுபட்ட வாசிமின் கூட்டாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளதக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சராய் காலே கான் போன்ற முக்கிய பேருந்து முனையங்களில் அதிகாலையில் வாசிம் மற்றும் அவரது கும்பல் பயணிகளை குறிவைத்து இந்த திருட்டில் ஈடுபடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவா்கள் சிறிது தூரம் ஆட்டோவை ஓட்டுவதும், பின்னா் கோளாறு ஏற்படுவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனா். காஷ்மீரி கேட், கீதா காலனி, கோட்வாலி, ஹஸ்ரத் நிஜாமுதீன், திமா்பூா், சீலாம்பூா் மற்றும் நியூ அசோக் நகா் ஆகிய இடங்களில் வாசிம் மீது குறைந்தது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினாா்.

தில்லி நகரம் முழுவதும் இதே போன்ற வழக்குகளில் வாசிமின் கூட்டாளிகளின் தொடா்பு குறித்தும் போலீசாா் விசாரித்து வருகின்றனா், மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளாா்.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க