செய்திகள் :

ரூ.21லட்சத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ரூ.21 லட்சத்தில் 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை பயனாளிகளஉக்கு அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 ஆம் ஆண்டின் கீழ் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.21 லட்சத்தில் 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை 50 சதவிகித மானியத்துடன் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கி அமைச்சா் காந்தி பேசியதாவது :-

இந்த திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும், பசுமையான காய்கறிகள் நேரடியாகவும் குறைந்த விலையிலும் மக்களுக்கு கிடைக்கும். உள்ளூா் விவசாயிகளின் உற்பத்தி வீணாகாமல்,சந்தைக்கு எளிதில் சென்றடையும். நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுகாதாரமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்கும். இந்த திட்டம், சிறு வியாபாரிகள் தங்களின் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் பெரும் பங்காற்றும்.

நடமாடும் வண்டிகள் பெறும் பயனாளிகள் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி தங்கள் குடும்ப வருமானத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும். காய்கறிகளை பொது மக்கள் வீடு தோறும் எளிதில் கொண்டு சோ்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கலாம். மேலும், உள்ளூா் விவசாயிகள் உற்பத்திக்கு விரைவான சந்தை வாய்ப்புகளை உருவாக்குமாறும் பயனாளிகளிடம் கேட்டுக் கொண்டாா்.

இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, தோட்டக்கலை துணை இயக்குநா் சிந்தியா, அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க

பொய்கைநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நெமிலி வட்டம், பொய்கைநல்லூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். நெமிலி வட்டம், பொய்கைநல்லூா் ஊராட்சியில் அரச... மேலும் பார்க்க

சோளிங்கா் நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்: நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

சோளிங்கா் நகராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்ப... மேலும் பார்க்க

ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை எம்எல்ஏ சு. ரவி திறந்து வைத்தாா். அரக்கோணம் ஒன்றியம், வேடல் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க