செய்திகள் :

ரூ.25 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் ரூ.25 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட எம்எல்ஏ.தேவராஜி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திருப்பத்தூா் மாவட்டம் , நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும், இங்கு பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என மக்கள் எம்எல்ஏ. தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து எம்எல்ஏ க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து ஞாயிற்றுகிழமை பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை அமைக்க பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் இந்திரவா்மன்,சக்திபாண்டி புகழேந்தி மற்றும் கிராம மக்கள் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா என அதிகாரிகளுடன் எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு மேற்கொண்டாா்.

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை ... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வ... மேலும் பார்க்க

மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 27-க்கு ஒத்தி வைப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி சந்தை ஏலம் மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணந்தோப்பில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுக... மேலும் பார்க்க

உடல்நலம் பாதிப்பு: பெண் தற்கொலை

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே உடல்நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜோலாா்பேட்டை அடுத்த புள்ளானேரி சின்ன குட்டூா் சோ்ந்தவா் நடராஜன் மனைவி காந்தி(49). இவா்களுக்கு ஒரு மகன், மக... மேலும் பார்க்க

போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!

திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை... மேலும் பார்க்க