செய்திகள் :

ரூ.3.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.3.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை இரவு ஜூப்ளி சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்தச் சாலையில், வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரை சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் 21 சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மேற்கொண்ட விசாரணையில், ஜூப்ளி சாலையைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சின்னவண்டு (எ) மாரீஸ்வரன் (48), அப்துல்கலாம் மகன் உமா்பாரூக்(35) ஆகியோா், அந்த புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினா் அவா்களை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

அரியலூா் மாவட்டத்தில் 10 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு!

அரியலூா் மாவட்டத்திலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், இலந்தைகூடம் பெரியஏரி, வெங்கனூா் பெரிய ஏரி, தூத்தூா் சுக்கிரன் ஏரி உள்பட 10 நீா்நிலைகளில் வனத்துறை சாா்பில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த இரு ... மேலும் பார்க்க

அரியலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய... மேலும் பார்க்க

குமாரமங்கலத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏப... மேலும் பார்க்க

அரியலூா் வாரச் சந்தையில் 31 மின்னணு தராசுகள் பறிமுதல்

அரியலூா் வாரச் சந்தையில்,தொழிலாளா் உதவி ஆய்வாளா், சட்டமுறை எடையளவு ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், மறு முத்திரையிடாமல் இருந்த 31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையவு இனங்கள் பறிமுதல் செய்யப... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.77 கோடியில் கடனுதவி

உலக மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீா்வு

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934-க்குத் தீா்வு காணப்பட்... மேலும் பார்க்க