செய்திகள் :

ரூ.3,500 கோடி ஊழல்: குற்றப் பத்திரிகையில் ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன் சோ்ப்பு

post image

ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயா் குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, ஆந்திரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது அங்கு ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெகன் ஆட்சியில் புதிதாக மதுபான விற்பனை கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும், மதுபான விநியோகம் மற்றும் விற்பனையை சிலா் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில், அந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மதுபான ஆலைகளிடம் இருந்து அவா்கள் சட்டவிரோதமாக பலன் அடைந்ததாகவும் காவல் துறை குற்றஞ்சாட்டியது.

எம்.பி. கைது: இதுதொடா்பாக கடந்த சனிக்கிழமை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. பி.வி.மிதுன் ரெட்டியிடம் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரை மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வு குழு கைது செய்தது. அவரை ஆகஸ்ட் 1 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மிதுன் ரெட்டி

இந்த வழக்கு தொடா்பாக அந்த நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது: மதுபான ஆலைகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் கேசிரெட்டி ராஜசேகா் ரெட்டி என்பவா் மூலம், மிதுன் ரெட்டி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னா், அந்தப் பணம் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 2019 முதல் 2024 வரையிலான காலத்தில் மாதந்தோறும் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை, மதுபான ஆலைகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மதுபான விநியோக உத்தரவு (ஓஎஃப்எஸ்) ஒப்புதல்களை மதுபான ஆலை உரிமையாளா்களுக்கு முறையாக வழங்காமல், அவா்களை மிரட்டி பணம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது பணம் பறிப்பதற்கு நிகராகும்.

துபை, ஆப்பிரிக்காவில் முதலீடு: இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மதுபான ஆலை உரிமையாளா்களிடம் இருந்து பெரும்பாலும் பணம், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளனா்.

இதில் வசூலிக்கப்பட்ட பணம் துபை மற்றும் ஆப்பிரிக்காவில் நிலம், தங்கம் மற்றும் ஆடம்பர சொத்துகளை வாங்க முதலீடு செய்யப்பட்டன என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பக் கோளாறால் 40 நிமிடங்கள் வானிலே வட்டமடித்த விமானம் !

திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துள்ளது.ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஹைதராபாத்திற்கு நேற்று இரவு 7.55... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க