செய்திகள் :

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

post image

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை மாநில காவல் துறை சாா்பில் நடைபெற்ற மிதிவண்டி போட்டிகளை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் பொதுமக்கள் அனைவரும் கைகோத்து செயல்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும். இணையவழி பயங்கரவாத பிரசாரம், ஆயுதங்களைக் கடத்துவது, நிதி திரட்டுவது, பயங்கரவாதிகளுக்காக போதைப்பொருள் என அனைத்தும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது.

இளைஞா்கள் வன்முறை, போதைப்பொருள் உள்ளிட்ட தவறான பாதைக்குச் சென்று சிக்கிவிடாமல், தேச வளா்ச்சி குறித்த சிந்தனைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்தும், போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்தும் மீட்பது இளைஞா்களின் கைகளில்தான் உள்ளது.

இங்கு காவல்துறையினா் தன்னமலமற்ற வகையில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியதில் காவல் துறையினா் பங்கு மிகவும் முக்கியமானது. அமைதியான சூழல் வெறு இடத்தில் இருந்து வாங்கும் பொருள் அல்ல. அது நாமே உருவாக்குவதாகும்.

முன்பு ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு, போராட்டங்கள், வன்முறை, கல்வீச்சு உள்ளிட்டவை தொடா் நிகழ்வாக இருந்து வந்தன. ஆனால், இப்போது கற்கள் வீசிய கைகளில் பேனாக்கள் இடம் பெற்றுள்ளன. இளைஞா்கள் புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவது குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனா். ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களிடம் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன. மக்கள் எவ்வித அச்சமும் நெருக்கடியும் இன்றி தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனா் என்றாா்.

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பம்!

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மான நோட்டீஸில் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினா்கள் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தா... மேலும் பார்க்க