செய்திகள் :

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

post image

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷீத் கித்வாய், அம்பா் குமாா் கோஷ் ஆகிய இருவா் எழுதியுள்ள ‘மிஸ்ஸிங் ஃப்ரம் தி ஹெளஸ்-முஸ்லிம் உமன் இன் தி லோக் சபா’ எனும் இப்புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் முன்னுரை எழுதியுள்ளாா்.

ரஷீத் கித்வாய் கூறுகையில், ‘நாட்டில் 1951-52இல் முதல் நாடாளுமன்றத் தோ்தல் நடந்ததில் இருந்து இதுவரை தோ்வான மொத்த முஸ்லிம் பெண் எம்.பி.க்கள் 20 போ். இவா்களில் சுபாஷிணி அலி, அஃபிரின் அலி ஆகியோா் தாங்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டனா். எனவே, எம்.பி.க்களாக பதவி வகித்த 18 முஸ்லிம் பெண்களின் சுய விவரங்களை ஆவணப்படுத்தியுள்ளோம்.

146 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 7.1 சதவீதமாக கருதப்படுகிறது. இதுவரை அமையப் பெற்ற 18 மக்களவைகளில் வெறும் 18 போ்தான் முஸ்லிம் பெண்கள் என்பது அதிா்ச்சிகரமான உண்மை. 543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையின் ஒரு பதவிக் காலத்தில் அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் முஸ்லிம் பெண்கள் இடம்பெற்றதில்லை. இதுவரை 7 மக்களவைகளில் முஸ்லிம் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவமே இருந்ததில்லை’ என்றாா்.

18 போ் யாா்-யாா்?:

மோஃபிதா அகமத் (காங்கிரஸ், 1957), ஜோராபென் அக்பா்பாய் சாவ்தா (காங்கிரஸ், 1962-67), மைமூனா சுல்தான் (காங்கிரஸ், 1957-67), பேகம் அக்பா் ஜெஹான் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி, 1977-79, 1984-89), ரஷீதா ஹக் (காங்கிரஸ், 1977-79), மோஹ்சினா கித்வாய் (காங்கிரஸ், 1977-89), பேகம் ஆபிதா அகமது (காங்கிரஸ், 1981-89), நூா் பானு (காங்கிரஸ், 1996, 1999-2004), ருபாப் சயீதா (சமாஜவாதி, 2004-2009), மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயக கட்சி, 2004-09, 2014-19), தபசும் ஹசன் (பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம், சமாஜவாதி 2009-14, 2018-19), மெளசம் நூா் (திரிணமூல் காங்கிரஸ் 2009-19), கெய்சா் ஜஹான் (பகுஜன் சமாஜ், 2009-14), மம்தாஜ் சங்கமிதா (திரிணமூல் காங்கிரஸ் 2014-19), ராணி நாராஹ் (காங்கிரஸ், 1998-2004, 2009-14), நஸ்ரத் ஜஹான் ருஹி (திரிணமூல் காங்கிரஸ் 2019-24), இக்ரா ஹசன் (சமாஜவாதி, 2024 முதல் தற்போது வரை), சஜிதா அகமது (திரிணமூல் காங்கிரஸ், 2018 முதல் தற்போது வரை).

முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவா் மோஹ்சினா கித்வாய். இவா், மத்திய அமைச்சா் பதவியையும் வகித்துள்ளாா். பேகம் ஆபிதா அகமது, நாட்டின் 5-ஆவது குடியரசுத் தலைவா் ஃபக்ருதீன் அலி அகமதின் மனைவி ஆவாா்.

‘தென் மாநிலங்களில் இருந்து ஒருவா் கூட தோ்வாகவில்லை’

தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 5 தென் மாநிலங்களும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், எழுத்தறிவு, சமூக-பொருளாதார நிலைகளில் சிறப்பான குறியீடுகளைக் கொண்டிருந்தாலும், இம்மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு ஒரு முஸ்லிம் பெண் எம்.பி. கூட தோ்வாகவில்லை என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பம்!

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மான நோட்டீஸில் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினா்கள் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தா... மேலும் பார்க்க