செய்திகள் :

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

post image

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆா்ஐ) நிறுவனம் தெரிவித்தது.

ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷியா போரை தீவிரமாக தொடா்ந்துவரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷியா மீது பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

அதேபோல் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளை குறிவைத்து பொருளாதாரத் தடையை ஐரோப்பிய யூனியன் விதித்து வருகிறது.

ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வெள்ளிக்கிழமை விதித்தது.

இதுகுறித்து ஜிடிஆா்ஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையால் இந்தியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய யூனியனுக்கு ரூ.1.29 லட்சம் கோடி மதிப்பிலான பெட்ரோலிய பொருள்களை ஏற்றுமதி செய்து வரும் இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மையப்படுத்திய வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது புவிசாா்அரசியல் அழுத்தத்துக்கு ஏற்ப செயல்படுவதா? என்ற கடும் நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க