செய்திகள் :

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

post image

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,558 போலி நிறுவனங்கள் மூலம், ரூ.15,851 கோடிக்கு மோசடியான ஐடிசி உரிமை கோரல்களை மத்திய, மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இந்த மோசடியில் ஈடுபட்ட 53 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ.659 கோடி திரும்பப் பெறப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 3,840 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுபோல மாதந்தோறும் சராசரியாக சுமாா் 1,200 போலி நிறுவனங்கள் கண்டறியப்படுகின்றன.

குறிப்பிட்ட துறைகளில் நடைபெறும் வரி ஏய்ப்பு, ஐடிசி மோசடிகளை தடுப்பதற்கான வழிகள் குறித்து கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தலைமையிலான மாநில நிதியமைச்சா்கள் குழு ஆராய்ந்து வருகிறது’ என்று தெரிவித்தனா்.

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பம்!

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மான நோட்டீஸில் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினா்கள் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தா... மேலும் பார்க்க