செய்திகள் :

ரூ.30 லட்சத்திற்கு ஏலம் போன டிவிட்டர் இலச்சினை!

post image

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

தொழிலதிபர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி பிறகு அதற்கு எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். இதைத்தொடர்ந்து டிவிட்டரின் நீலநிற பறவை இலச்சினை(லோகோ) சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது.

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

254 கிலோ எடை கொண்ட இந்த லோகோ அண்மையில் ஏலம் விடப்பட்டது. அது ஏலத்தில் கிட்டதட்ட $35,000க்கு விற்கப்பட்டுள்ளது. அரியப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் ஆஆர் ஏல நிறுவனம் இதனை ஏலம் விட்டுள்ளது.

இருப்பினும் ஏலத்தில் டிவிட்டர் இலச்சினையை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் அதே ஏலத்தில் அரிய வகை ஆப்பிள்-1 கணினி $375,000க்கும், ஸ்டீவ் ஜாப்ஸ் (1976) கையொப்பமிட்ட ஆப்பிள் காசோலை $112,054க்கும் ஏலம்போனது.

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூஸிலாந்தில் இன்று(மார்ச் 25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த பயங்கர நில அதிர்வால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.நியூஸிலாந்தின் தெற்... மேலும் பார்க்க

தென் கொரியா பிரதமரின் பதவி நீக்கம்: ரத்து செய்தது நீதிமன்றம்

சியோல்: தென் கொரிய பிரதமா் ஹன் டக்-சூ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது. இது தொடா்பாக நடைபெற்றுவந்த விசாரணையில் பதவி நீக்கத்தை ... மேலும் பார்க்க

நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு

காத்மாண்டு: நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகிவருகிறது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சா் அஜய் சௌராசியா கூறுகையில், ‘திருமணம் செய்வதற்கான குறை... மேலும் பார்க்க

டுடோ்த்தேவுக்கு அடைக்கலம்: சீனா மறுப்பு

பெய்ஜிங்: மனித உரிமை குற்றச்சாட்டில் ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டுள்ள பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு அடைக்கலம் அளிக்கவில்லை என்று சீனா கூறியுள்ள... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயா் கைது: துருக்கியில் வலுக்கும் போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் போராட்டம் வலுவ... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: துபையில் அமெரிக்கா-ரஷியா பேச்சு

துபை: உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை தொடங்கினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: உக்ரைன் போரை மு... மேலும் பார்க்க