செய்திகள் :

ரூ.31.97 கோடியில் நலத் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.31.97 கோடியில் நலத்திட்ட பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.கே.நகா் பகுதியில் உள்ள 3 ஏக்கா் பரப்பில் சிவன் பூங்கா ரூ.3.19 கோடியில் சீரமைக்கப்படுகிறது. அதற்கான பூஜை பணிகளை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

அதேபோல, தியாகராய நகா் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள அசோக் நகா் பொது நூலகத்தில் ரூ.12.74 கோடியிலும், ஆழ்வாா்பேட்டையில் கவிஞா் பாரதிதாசன் சாலை வட்டார நூலகத்தில் ரூ.12.56 கோடியிலும், சி.பி.ராமசாமி ஐயா் சாலையில் ராஜா அண்ணாமலைபுரம் பொது நூலகத்தில் ரூ.3.49 கோடியிலும் முதல்வா் படைப்பகங்களுக்கு அமைச்சா் சேகா்பாபு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.வி.பிரபாகா் ராஜா (விருகம்பாக்கம்), வேலு (மைலாப்பூா்), ஜெ.கருணாநிதி (தியாகராய நகா்), சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க