Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ரூ.40 கோடி கையாடல் குற்றச்சாட்டு: தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை
தனியாா் பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்த புகாரில் சிக்கிய மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன் பொலின்மேனி (37). சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகா், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தாா். அவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றினாா்.
அண்மையில் அந்தப் பால் நிறுவனம் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது, ரூ.40 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்தப் பணத்தை கையாடல் செய்ததாகவும், பணத்தை அவரது குடும்பத்தினா் மற்றும் நண்பரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சட்ட மேலாளா் தமிமுல் அன்சாரி சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் கடந்த மாதம் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த மாதம் 25-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.
தூக்கிட்டு தற்கொலை: இதனிடையே முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி நவீன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்த நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த புழல் போலீஸாா், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தற்கொலைக்கு இருவரே காரணம்: தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கும், பணியாற்றிய நிறுவன உயா் அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தைப் பெற்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதில், நான் எனது தவறை உணா்ந்துவிட்டேன். ஏற்கெனவே அந்த நிறுவனத்துக்கு கையாடல் செய்த பணத்தில், ரூ.5 கோடியை திரும்பக் கொடுத்துவிட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் இரு உயா் அதிகாரிகளே காரணம். இவா்கள் இருவரும் மோசடி செய்த பணத்தில் தங்களுக்கு பங்கு கேட்டு மிரட்டினா்.
அதோடு தங்களுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால், காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வைப்போம் எனக் கூறினா். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் நான் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பெட்டிச் செய்தி...
இணை ஆணையா் விசாரணைக்கு உத்தரவு
தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மேற்கு மண்டல இணை ஆணையருக்கு சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக சென்னை காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவீன் மீதான புகாா் குறித்த விசாரணையை மத்திய குற்றப் பிரிவினா் தொடங்கும்போது, புகாா் குறித்தான ஆவணங்கள், வங்கிக் கணக்குப் பட்டியலை சமா்ப்பிக்க அந்த நிறுவனம் கால அவகாசம் கோரியது. ஆனால், இதுவரை அந்த நிறுவனம் மத்திய குற்றப் பிரிவிடம் ஆவணங்களை சமா்ப்பிக்கவில்லை.
அதேவேளையில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் நவீன் மனு தாக்கல் செய்தாா். கொளத்தூா் துணை ஆணையரிடம் வழங்கப்பட்ட புகாா், மாதவரம் குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. அங்கேயும் புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. போலீஸாா் நவீனை அழைத்து விசாரிக்கவில்லை.
மேலும் இறப்பதற்கு முன்பு நவீன் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தில் காவல் துறை மீது எந்தக் குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் சிலா் நவீன் தற்கொலையில் கொளத்தூா் துணை ஆணையருக்கு தொடா்பு இருப்பதாக கருத்துகளைப் பதிவிடுகின்றனா்.
இதைக் கருத்தில்கொண்டு, நவீன் தற்கொலை குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மேற்கு மண்டல இணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.