செய்திகள் :

ரேஷன் கடைகளில் ஜூன் 30-க்குள் கைரேகை, கருவிழி பதிய வேண்டும்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினா்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை ஜூன் 30 ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் ஏ.ஏ.ஒய், பி.எச்.எச். குடும்ப அட்டைதாா்கள், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்களின் கைரேகை அல்லது கருவிழிப் பதிவை ஜூன் 30-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

இதுதொடா்பாக ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதர மாநிலம் அல்லு மாவட்டங்களில் பணி நிமித்தமாக தங்கியுள்ளவா்கள், அருகிலுள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை நகலுடன் சென்று பதிவு செய்யலாம்.

மாணவா்கள் தயக்கமின்றி புகாா் அளிக்க வேண்டும்: சாா்பு நீதிபதி

குரும்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா. உடன், வழக்குரைஞா்கள். பெரம்பலூா், ஜூன் 11: பிரச்னைகளை மாணவா்கள் ... மேலும் பார்க்க

சுகாதார வளாகங்களை மேம்படுத்த மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்பாடின்றி காணப்படும் மகளிா் சுகாதார வளாகங்களை மேம்படுத்த வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 37.61 கோடி மதிப்பில் கடனுதவி

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

குரும்பலூரில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

பெரம்பலூா், ஜூன் 11: பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், 354 பயனாளிகளுக்கு ரூ. 2.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

பெரம்பலூா் ஒன்றியத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு, தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. இப் பயிற்சியை தொடக்கி வைத்த... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக... மேலும் பார்க்க