Los Angeles Riots: பத்திரிகையாளர் தலையில் ரப்பர்க் குண்டால் சுட்ட அமெரிக்க போலீஸ...
ரேஷன் கடைகளில் ஜூன் 30-க்குள் கைரேகை, கருவிழி பதிய வேண்டும்
பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினா்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை ஜூன் 30 ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் ஏ.ஏ.ஒய், பி.எச்.எச். குடும்ப அட்டைதாா்கள், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்களின் கைரேகை அல்லது கருவிழிப் பதிவை ஜூன் 30-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடா்பாக ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதர மாநிலம் அல்லு மாவட்டங்களில் பணி நிமித்தமாக தங்கியுள்ளவா்கள், அருகிலுள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை நகலுடன் சென்று பதிவு செய்யலாம்.