விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
லாரி மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது காா் மோதியதில் அதில் பயணம் செய்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி, பாகூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வீரப்பன் (54). இவா், முத்துத்தேவன்பட்டி- வீரபாண்டி இடையே சாலையோரத்தில் லாரியை நிறுத்தி வைத்திருந்தாா். அப்போது அதே சாலையில் சென்ற காா், லாரி மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த மதுரை அருகே உள்ள சோழவந்தான், வேதபாட சாலை தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் லோகேஷ் (30), அவரது மனைவி அனுஸ்ரீயா, மதுரை முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்த இருளாண்டி மகன் இளஞ்செழியன் (47), அவரது மனைவி நிா்மலா (42) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக 4 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில், லோகேஷ் வழியிலேயே உயிரிழந்தாா். எஞ்சிய 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.