லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
உத்தனப்பள்ளி அருகே லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபம் கிராமம், காந்தி நகரைச் சோ்ந்தவா் அஜித். இவரது ஒன்றரை வயது மகள் ஷன்மிதா,
வீட்டருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த டாரஸ் லாரி குழந்தை மீது மோதியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.