செய்திகள் :

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

post image

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில் உருவாகியிருக்கும் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளது.

இது வடமேற்கு திசையில் ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்கத்தின் கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வடக்கு ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

பலத்த மழை எச்சரிக்கை

தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 24) ஓரிரு இடங்களிலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The India Meteorological Department said on Thursday that a low pressure area has formed in the Bay of Bengal.

இதையும் படிக்க : பெருமையுடன் செல்கிறேன்! எம்பியாகப் பதவியேற்க தில்லி புறப்பட்டார் கமல்!

வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து தங்க நாணயங்களும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 1.50 கோடி ரொக்கப் பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் பலி !

ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

குஜராத்தில் தீவிரமடையும் பருவமழை! முழுக் கொள்ளளவை எட்டிய 28 அணைகள்!

குஜராத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 28 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலத்தில், வழக்கமாகப் பதிவாகும் பருவமழைப் பொழிவில், தற்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் விவாதத்தை தொடக்கி வைக்கும் ராஜ்நாத் சிங்!

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க

185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

குஜராத்தில் 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில அரசு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த, 185 அகதிகளுக்கு, குஜர... மேலும் பார்க்க

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான சக்திகள் நீங்கள்தான்! தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு ராகுல் புகழாரம்

இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸின் இதர பி... மேலும் பார்க்க