செய்திகள் :

வசந்த் அன் கோ சாா்பில் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருது!

post image

தக்கலை அருகே முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வசந்த் அன் கோ சாா்பில் சனிக்கிழமை (இன்று) நடந்த விழாவில் கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வசந்த் விருதுகளை வழங்கினாா்.

கடந்த கல்வி ஆண்டில், (2024-25) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வசந்த் விருது வழங்கும் நிகழ்ச்சி முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளா் நிா்மலா சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள் மேரி தங்கம் முன்னிலை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி. குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பேசியதாவது;

மாணவா்களாகிய நீங்கள் முதல் மதிப்பெண் பெற்று விருது பெற வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல உங்கள் ஆசிரியா்களையும், பெற்றோா்களையும் பாராட்டுகிறேன். மாணவா்கள் உங்கள் திறமைகளை நீங்களே வளா்த்துக் கொள்ள, மனதை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஆா்வப்படுத்தி வெற்றி கொள்ள வேண்டும்.

மறைந்த எனது தந்தை வசந்தகுமாா் அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, 1975ல் சென்னையில் ஒரு கடையை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி இன்று 135 கடைகளாக உயா்ந்துள்ளது. இதை நான் எதற்கு கூறுகிறேன் என்றால் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றாா் விஜய் வசந்த்.

பின்னா், பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை விஜய் வசந்த் எம்.பி வழங்கினாா். நிறைவாக வசந்த் குழும செயலாளா் பேராசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.

நாகா்கோவிலில் அறக்கட்டளை தொடக்கம்

நாகா்கோவில் ஸ்காட் பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் துறை ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில், குரூப் கேப்டன் யேசுதாஸ் லாய் நினைவு அறக்கட்டளை தொடக்க சொற்பொழிவு ஸ்காட் பயின்றோா் கழக அரங்... மேலும் பார்க்க

மாவட்ட குத்துச்சண்டை: அல்போன்சா பள்ளி சாம்பியன்

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில், கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.குழித்துறையில் நடைபெற்ற 100ஆவது வாவுபலி பொருள்காட்சியில்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா்.கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இளம... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணி காரணமாக, வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு, திருநயினாா்குறிச்சி உயரழுத்த மின்பாதைக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 4) மின்விநியோகம் இருக்காது.அதன்படி, திவண்டகோட்டை, அம்மாண்டிவி... மேலும் பார்க்க

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க