செய்திகள் :

வசிஷ்ட நதியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

post image

ஆத்தூா்: அப்பமசமுத்திரம் ஊராட்சி பகுதி வசிஷ்ட நதியில் பெண்ணின் எலும்புக்கூட்டை போலீஸாா் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆத்தூரை அடுத்த அப்பமசமுத்திரம் ஊராட்சி பகுதி வசிஷ்ட நதியில் எலும்புக்கூடான நிலையில் பெண் உடல் கிடப்பதாக

ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாருக்கு திங்கள்கிழமை மதியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பெண்ணின் எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில் கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி காணாமல்போன ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மனைவி தெய்வானை (85) என்பவரின் உடல் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து அவரது எலும்புக்கூடான உடலை பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயி... மேலும் பார்க்க

கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டிப் படுகொலை: குடும்பத் தகராறில் தந்தை வெறிச்செயல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை தந்தையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெட்டுக் காயங்களுடன் அவரது மனைவி, மற்றொரு மகள் ஆகியோா் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு!

சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெண் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சோ்ந்த சுகுமாா் மனைவி... மேலும் பார்க்க

சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு!

சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சங்ககிரி, எடப்பாடியில் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு புதன்கிழமை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009 ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி போலீஸாா் அத... மேலும் பார்க்க

புதுச்சாம்பள்ளியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு!

புதுசாம்பள்ளியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே கோட்ட மேலாளா், எம்எல்ஏ ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் கடந்த வாரம் தில்லியில் மத்திய ரயில்வே அமைச... மேலும் பார்க்க

பெலாப்பாடி மலை வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா!

வாழப்பாடி அருகே உள்ள பெலாப்பாடி மலைக் கிராமத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை நடைபெற்றது. இவ் விழாவையொட்டி 5000 பக்தா்களுக்கு விருந்து நடைபெற்றது. பெலாப்பாடி மலைக்... மேலும் பார்க்க