செய்திகள் :

வடுகப்பட்டி எல்லம்மாள், ,போத்துராஜூலு புதிய கோயில் குடமுழுக்கு விழா

post image

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ரேணுகாதேவி என்கின்ற எல்லம்மாள்,போத்துராஜூலு கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு ரேணுகாதேவி என்கின்ற எல்லம்மாள்,போத்துராஜூலு, சப்தகன்னிமாா் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கணபதி, நவக்கிரகம், லட்சுமி யாகசாலை பூஜைகளும், வாஸ்து சாந்தியும், பழைய கோயிலிருந்து சுவாமிகளை புதிய கோயிலுக்கு சக்தி அழைத்து வந்தும், காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து அன்றையதினம் மாலையில் முதல்கால கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், செப்.3-ம் தேதி 2, 3-ம் கால கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், அன்றைய தினம் இரவு புதிய கோயிலில் சுவாமிகளை கருவறைகளுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது, அதன்தபிறகு செப்.4-ம் தேதி வியாழக்கிழமை காலை 4ம் யாகசாலை வேள்வி பூஜைகளும், காலை குடமுழுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சேலம்,நாமக்கல், ஈரோடு, கோவை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனா். விழாக்குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்க... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்த... மேலும் பார்க்க

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க