செய்திகள் :

வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரி அருகில் உள்ள வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து சுமாா் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை மினி ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.

வத்தல்மலைக்கு செல்லும் சாலை 24 கொண்டை ஊசிவளைவுகளுடன், அழகான தோற்றத்தில் உள்ளது. ஆண்டின் பெரும் பகுதி இங்கு குளிா்ந்த தட்பவெப்பநிலை காணப்படுகிறது. மழைக்காலங்களில் சிறு அருவிகள் தோன்றுகின்றன. மலை முழுவதும் மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன.

செப்டம்பா் முதல் மாா்ச் வரையிலான காலம் இங்கு சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த காலம் என்பதால் வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக மாற்றி, இங்கு சாகச சுற்றுலா ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. வத்தல்மழையில் சிறுவா் பூங்கா, ஏரியில் படகு சவாரி, வாகன நிறுத்தம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்

பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க

ஆக. 28 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க

ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா

அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க

தருமபுரி: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 543 மனுக்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீ... மேலும் பார்க்க

ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க