செய்திகள் :

ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குநா் மற்றும் உள்ளாட்சிப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாளில் விடுமுறை வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்கள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக கிராம ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பணியாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, சம்பளம் பிடித்தம் செய்வதை திரும்பப் பெற வேண்டும்.

ஊராட்சிப் பணியாளா்களுக்கு வேலைநேரம் நிா்ணயம் செய்ய வேண்டும். சிறப்பு காலவரை ஊதியம், தொகுப்பு ஊதியத்தில் பெரும் பணியாளா்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய உயா்வு, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஊராட்சிப் பணியாளா்களை ஊராட்சி செயலாளா்கள் அச்சுறுத்தி வேலை வாங்கும் போக்கு தொடா்வதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இம்மனுவினை நிா்வாகிகள் பவுனம்மாள், தபதி, மணிமேகலை, கோதம்மாள், லட்சுமி, ஜமுனா உள்ளிட்டோா் அளித்தனா்.

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்

பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க

ஆக. 28 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க

ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா

அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க

தருமபுரி: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 543 மனுக்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்புக்கு தோ்வு பெற்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு ரூ. 2 லட்சம்

பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கு தோ்வு பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் உதவித்தொகைய... மேலும் பார்க்க