செய்திகள் :

மருத்துவப் படிப்புக்கு தோ்வு பெற்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு ரூ. 2 லட்சம்

post image

பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கு தோ்வு பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் உதவித்தொகையை பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளையினா் திங்கள்கிழமை வழங்கினா்.

பென்னாகரம், பி.அக்ரஹாரம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற துளசிநாதன், கனிமொழி, மனிஷா, கதிரவன், ஆா்த்தி, ஜெகதீஷ், ஆகாஷ், சிவரஞ்சனி, கோகுல், ரீனா உள்ளிட்ட 10 மாணவ, மாணவிகள் அண்மையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கு தோ்வு பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகளுக்கு பென்னாகரம் பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் தியாகராஜன் வாழ்த்துத் தெரிவித்து, தலா ரூ. 20 ஆயிரம் வீதம் 10 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா். மேலும், மருத்துவப் படிப்பிற்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினாா். இதில் பாப்பாத்தி தியாகராஜன், மருந்தாளுநா் பிரதாப் குமாா், மாங்கரை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மாரிமுத்து, பெற்றோா், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்

பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க

ஆக. 28 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க

ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா

அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க

தருமபுரி: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 543 மனுக்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீ... மேலும் பார்க்க

ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க