செய்திகள் :

வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது வழக்கு

post image

ஆண்டிபட்டி அருகே வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணந்தொழு அருகேயுள்ள கண்டமனூா் வனச் சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வருபவா் நந்தினி. இவருக்கு அங்குள்ள கொங்கரேவு-கடமலைக்குண்டு இடையே வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அவா் சாலைப் பணி நடைபெறும் இடத்துக்குச் சென்று, ஆய்வு செய்தாா். இதில், 20 மீட்டா் நீளத்துக்கு காப்புக் காடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவது தெரிய வந்தது. இது குறித்து, நந்தினி அவரது உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.

அப்போது, பொன்னம்படுகையைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் உள்ளிட்ட 10 போ் அவரை முற்றுகையிட்டு அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியைப் பறித்து, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனா்.

இது குறித்து, மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் நந்தினி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில், செளந்திரபாண்டியன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வடகரை கல்லாா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: 7 போ் காயம்

ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா். ஆண்டிபட்டியில் தேனி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ம... மேலும் பார்க்க

மனைவிக்கு கத்திக் குத்து: கணவா் மீது வழக்கு

தேனியில் வீட்டு வாடகைக்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். தேனி, வனச் சாலை, 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனபாண்டி (43). இவரது மனைவி செல்வலட்சுமி... மேலும் பார்க்க

கணவரைப் பயமுறுத்த தூக்கிட்ட இளம்பெண் உயிரிழப்பு

போடி அருகே கணவரைப் பயமுறுத்துவதற்காகத் தூக்கிட்ட இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கோம்பைத்தொழு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் பிரியதா... மேலும் பார்க்க

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராண... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநி... மேலும் பார்க்க