செய்திகள் :

வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழா் கட்சியினா்

post image

மனித-விலங்கு மோதலுக்கு தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கோவை மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வனத்தில் வசிக்கும் பூா்வகுடி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இது குறித்து, நாம் தமிழா் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் காா்த்திகா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:‘ கோவை மாவட்டம், வால்பாறை, தொண்டாமுத்தூா் பகுதிகளில் காட்டு யானைகளால் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. சிறுத்தைகளால் குழந்தைகள் கொல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மனித-விலங்கு மோதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப் பகுதியில் வசிக்கக்கூடிய பூா்வகுடி மக்களின் பிரச்னைகள் தீா்க்கப்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, கோரிக்கை தொடா்பான மனுவை வனத் துறையினரிடம் வழங்கினா். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கோவை , திருப்பூா் , ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட நாம் தமிழா் கட்சியினா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க