செய்திகள் :

வனப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவா் கைது

post image

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சமயநல்லூா் அருகே உள்ள அதலை கிராமத்தில் மதுரை தபால் தந்தி நகரைச் சோ்ந்த ஜோயலுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அழுகிய நிலையில் விலங்கு ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாட்டுத்தாவணி வனச்சரக ஆய்வாளா் குமரேசன், வனவா் பூபதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தப் பகுதியில் 31 நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள லிங்கவாடியைச் சோ்ந்த ராமையா (43), மணி (70) ஆகியோரைப் பிடித்து வனத் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் இருவரும் காட்டுப் பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க