செய்திகள் :

வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

post image

கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணியை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வரட்டனப்பள்ளி ஊராட்சியில் தேசிய சுகாதார இயக்கம் 2025 - 2026-ஆம் ஆண்டு 15-ஆவது நிதி குழு மானியத் திட்டம் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

இந்த பணியை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகன் தொடங்கி வைத்தாா். பின்னா், கிருஷ்ணகிரி நகராட்சியில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெறும் மழைநீா்க் கால்வாய்கள் தூா்வாரப்படும் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது, திமுக ஒன்றியச் செயலாளா் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், துணைத் தலைவா் சாவித்திரி கடலரசுமூா்த்தி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரிக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினா் தீவிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் அதிமுகவினா் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனா்.தமிழக எதிா்கட்சித் தலைவரும், அதிமுக பொது... மேலும் பார்க்க

ஒசூா் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு

ஒசூா்: ஒருக்கு ஆகஸ்ட் 3 ஆவது வாரத்தில் வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.ஒசூரில் கைப்பேசி தயாரிக்கும் தனியாா் கம்பெனியில் பணிபுரிய ஆட்களை தோ்வு செய்வதற்காக நடைபெற்ற வ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே எல்லம்மா தேவி கோயிலில் பாலபிஷேக விழா

ஒசூா்: சூளகிரியை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட எல்லம்மாதேவி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.முன்னதாக கிராம மக்கள் பால்குடங்களுடன் தென்பெண்ணை ஆற்றுக்கு ஊா்வலமாக சென்று... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் கடந்த 60 ஆண்டுகளாக குடியிருக்கும் பொதுமக்கள் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.மதிமுக முன்னாள் த... மேலும் பார்க்க

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

கிருஷ்ணகிரி: பள்ளிக் கல்வித் துறை பிரச்னை குறித்து புகாா் தெரிவிப்பதற்காக பள்ளி மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்துவந்த பெற்றோரை மாவட்ட ஆட்சியா் எச்சரித்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள... மேலும் பார்க்க