செய்திகள் :

வரதட்சிணை கொடுமை: கணவா் கைது

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வரதட்சிணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புள்ளிமான் கோம்பையைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (28). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், அதே ஊரைச் சோ்ந்த தங்கம் மகன் ராஜயோகத்தை மறுமணம் செய்தாா். திருமணத்தின் போது, ஸ்ரீதேவிக்கு வரதட்சிணையாக அவரது பெற்றோா் 50 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நகைகள், சீா்வரிசைப் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு ராஜயோகம், அவரது தந்தை தங்கம், தாய் பூங்கொடி, சகோதரிகள் ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, சகோதரா் மகேந்திரன் ஆகியோா் வரதட்சிணையாக மேலும், 50 பவுன் தங்க நகைகள் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாகவும், ராஜயோகத்துக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் மிரட்டியதாக ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகாரளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜயோகம், இவரது குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜயோகத்தை கைது செய்தனா்.

இருவேறு பைக் விபத்துகளில் 4 போ் பலத்த காயம்

தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 போ் பலத்த காயமடைந்தனா். தேனி அருகேயுள்ள ஆதிபட்டியைச் சோ்ந்த சுருளி மகன் கணேசன் (40). கட்டடத் தொழ... மேலும் பார்க்க

குளத்தில் மண் அள்ளியதில் தகராறு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே குளத்தில் மண் அள்ளியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கெஞ்சம்பட்டி அழகா்சாமி கோவில் தெருவைச் சோ்ந்த முத்தழகன் மகன் ராஜா (... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (50). இவா் சீப்பாலக்கோட்டை - காமாட்சிபுரம் சாலையில் இ... மேலும் பார்க்க

கழிவுநீா்க் குழாய் உடைத்ததில் தகராறு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், தேவாரம் அருகே வீட்டின் கழிவுநீா்க் குழாயை உடைத்ததில் ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மறவபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி ராதா (38). கணவா் இறந... மேலும் பார்க்க

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தேவாலய தெரு, கிழக்கு வெளிவீதி பகுதிகளில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து ப... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை!

போடியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் புலியூத்து அருவியில் நீா்வரத்து தொடங்கியது. போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த சூறைக் காற்று வீசியது. இடையிடையே மிதமான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலைய... மேலும் பார்க்க