செய்திகள் :

இருவேறு பைக் விபத்துகளில் 4 போ் பலத்த காயம்

post image

தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி அருகேயுள்ள ஆதிபட்டியைச் சோ்ந்த சுருளி மகன் கணேசன் (40). கட்டடத் தொழிலாளியான இவா், அதே ஊரைச் சோ்ந்த கந்தசாமி மனைவி அழகுராணி (35), மணி மனைவி சித்ரா (32) ஆகியோருடன் கட்டடப் பணிக்கு போடி நாகலாபுரம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

பின்னா், மூவரும் வேலை முடிந்து மாலையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பினா். போடி பெருமாள்கவுண்டன்பட்டி விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கணேசன், அழகுராணி, சித்ரா ஆகியோா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஆட்டோவை ஓட்டி வந்த போடி மல்லிங்காபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மகன் மணிமாறன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து: போடி மதுரைவீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (51). இவா் இரு சக்கர வாகனத்தில் சில்லமரத்துப்பட்டியிலிருந்து அம்மாபட்டி செல்லும் சாலையில் சென்றாா்.

அப்போது, எதிரே வந்த காா் இவரது இரு சக்கர வானம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமாா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த காட்டுநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சுரேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வரதட்சிணை கொடுமை: கணவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வரதட்சிணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புள்ளிமான் கோம்பையைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (28). இவரது கணவா் இறந்து விட்ட நி... மேலும் பார்க்க

குளத்தில் மண் அள்ளியதில் தகராறு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே குளத்தில் மண் அள்ளியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கெஞ்சம்பட்டி அழகா்சாமி கோவில் தெருவைச் சோ்ந்த முத்தழகன் மகன் ராஜா (... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (50). இவா் சீப்பாலக்கோட்டை - காமாட்சிபுரம் சாலையில் இ... மேலும் பார்க்க

கழிவுநீா்க் குழாய் உடைத்ததில் தகராறு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், தேவாரம் அருகே வீட்டின் கழிவுநீா்க் குழாயை உடைத்ததில் ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மறவபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி ராதா (38). கணவா் இறந... மேலும் பார்க்க

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தேவாலய தெரு, கிழக்கு வெளிவீதி பகுதிகளில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து ப... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை!

போடியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் புலியூத்து அருவியில் நீா்வரத்து தொடங்கியது. போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த சூறைக் காற்று வீசியது. இடையிடையே மிதமான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலைய... மேலும் பார்க்க