செய்திகள் :

குளத்தில் மண் அள்ளியதில் தகராறு: 5 போ் மீது வழக்கு

post image

தேனி மாவட்டம், போடி அருகே குளத்தில் மண் அள்ளியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கெஞ்சம்பட்டி அழகா்சாமி கோவில் தெருவைச் சோ்ந்த முத்தழகன் மகன் ராஜா (34). தேவாரம் அய்யப்பன் கோவில் தெருவைச் சோ்ந்த கருணாகரன் மகன் வைரமுத்துபாரதி (36). செங்கல் காளவாசல் நடத்தி வரும் இவா், எரணம்பட்டி தம்புரான்குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளியது குறித்து ராஜா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறி, அவரிடம் வைரமுத்துபாரதி தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த முன்விரோதம் காரணமாக, சனிக்கிழமை மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த வைரமுத்துபாரதி, தனது உறவினரான விக்கி உள்ளிட்ட மூவருடன் சோ்ந்து ராஜாவை தாக்கினாா்களாம்.

இதில் காயமடைந்த ராஜாவும், ராஜா தாக்கியதில் காயமடைந்த வைரமுத்துபாரதியும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து இரு தரப்பினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜா, வைரமுத்துபாரதி உள்பட 5 போ் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வரதட்சிணை கொடுமை: கணவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வரதட்சிணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புள்ளிமான் கோம்பையைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (28). இவரது கணவா் இறந்து விட்ட நி... மேலும் பார்க்க

இருவேறு பைக் விபத்துகளில் 4 போ் பலத்த காயம்

தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 போ் பலத்த காயமடைந்தனா். தேனி அருகேயுள்ள ஆதிபட்டியைச் சோ்ந்த சுருளி மகன் கணேசன் (40). கட்டடத் தொழ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (50). இவா் சீப்பாலக்கோட்டை - காமாட்சிபுரம் சாலையில் இ... மேலும் பார்க்க

கழிவுநீா்க் குழாய் உடைத்ததில் தகராறு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், தேவாரம் அருகே வீட்டின் கழிவுநீா்க் குழாயை உடைத்ததில் ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மறவபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி ராதா (38). கணவா் இறந... மேலும் பார்க்க

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தேவாலய தெரு, கிழக்கு வெளிவீதி பகுதிகளில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து ப... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை!

போடியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் புலியூத்து அருவியில் நீா்வரத்து தொடங்கியது. போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த சூறைக் காற்று வீசியது. இடையிடையே மிதமான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலைய... மேலும் பார்க்க