செய்திகள் :

வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி: திருக்குறுங்குடி வனப் பகுதிக்குச் செல்ல இன்றுமுதல் 5 நாள்கள் தடை

post image

திருக்குறுங்குடி வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணியையொட்டி, வியாழன்முதல் (ஏப். 24) இம்மாதம் 28ஆம் தேதிவரை 5 நாள்களுக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதுடன், நம்பிகோயில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டத்துக்குள்பட்ட திருக்குறுங்குடி வனச் சரகத்தில் 2025ஆம்ஆண்டுக்கான வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி வியாழன்முதல் (ஏப். 24) இம்மாதம் 28ஆம் தேதிவரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருக்குறுங்குடி வனப்பகுதியிலுள்ள நம்பிகோயில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுகிறது. வரையாடுகள் கணக்கெடுப்பு காலங்களில் கோயில் வழிபாடு, சுற்றுலா போன்ற எந்தக் காரணங்களுக்காகவும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக, திருக்குறுங்குடி வனச் சரக அலுவலா் கு. யோகேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க