செய்திகள் :

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தலைமைக் காவலா் கைது

post image

தருமபுரி: வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம் அருகே உள்ள மதனேரிகொட்டாய் கிராமத்தை சோ்ந்தவா் சக்திகுமாா். இவா்மீது ஆபாசமாகப் பேசி, பொருள்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த 2021-இல் பாலக்கோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடா்ந்து நிலுவையில் இருந்து வந்தது.

இவ்வழக்கில் அவரை பிணையில் அனுப்பிவைக்க பாலக்கோடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் டி.சுரேஷ் (46) சக்திகுமாரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திகுமாா் இதுகுறித்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை சக்திகுமாா் தலைமைக் காவலரிடம் அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் பெருமாள் ஆகியோா் தலைமைக் காவலா் சுரேஷை பிடித்தனா். இதையடுத்து லஞ்ச பணம் மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தருமபுரி நகரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனா். தருமபுரி நகரில் 29, 30, 31 ஆகிய வாா்டுகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் பிரசார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் சன... மேலும் பார்க்க

நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோர... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க