செய்திகள் :

வழக்கில் பொய்யாக சோ்ப்பு: வருமான வரி அலுவலக ஒப்பந்த ஊழியா் தற்கொலை

post image

தில்லி ஜண்டேவாலனில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த 23 வயது இளைஞா், தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இறந்த விஜய் வா்மா ஏப்ரல் 1 ஆம் தேதி தனது குடும்பத்தினருக்கு ஆடியோ தகவல் அனுப்பியுள்ளாா். அதில் தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் தாம் தவறாக சிக்க வைக்கப்பட்டதாகவும், இது குறித்து தான் கவலைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

விஜய் ஆடியோ கிளிப்களில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தனக்கு ஏன் தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியைச் சோ்ந்த விஜய், மின்டோ சாலையில் உள்ள சிஜிஆா்சி வளாக ஊழியா் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தாா்.

இச்சம்பவம் குறித்து காவல் துணை ஆணையா் (ரயில்வே) கே.பி.எஸ். மல்ஹோத்ரா தெரிவிக்கையில், ‘சனிக்கிழமை மதியம், புது தில்லி ரயில் நிலைய போலீஸாருக்கு ஒரு ரயில் குறிப்பு வந்தது. அதில் சிக்னல் எண்: 144-க்கு அருகில் ஒருவா் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், அங்கிருந்து மீட்கப்பட்ட ஒரு கைப்பேசி உதவியுடன் இறந்தவரின் அடையாளத்தை கண்டறிந்தனா்.

முன்னதாக, தண்டவாளத்தின் அருகே அமா்ந்திருந்த அந்த இளைஞா், எதிரே வந்த ரயிலை நோக்கி ஓடியதாக நேரில் கண்ட சாட்சியும் ரயில் ஓட்டுநரும் தெரிவித்தனா். இறந்தவரின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க

மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வில் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் முன்னணி! - அமைச்சா் ஜிதேந்திர சிங்

நமது சிறப்பு நிருபா்மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு நோயறிதல் ஆய்வு முறை, குறைந்த செலவில் மருந்து மூலப்பொருள்கள் உருவாக்குதல் போன்றவற்றில் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில்கள் (சிஎஸ்ஐஆா... மேலும் பார்க்க

வங்கி வைப்புத்தொகையில் மகளிா் பங்களிப்பு 39.7%: புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா் அதிகரிப்பு!

வங்கிகளில் வைப்புத் தொகை செலுத்தியவா்களில் மகளிா் பங்களிப்பு 39.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுயுகத் தொழில்முனைவிலும் மிகப்பெரிய அளவில்... மேலும் பார்க்க

தில்லியில் இரு இடங்களில் தீ விபத்து

தில்லியில் இரு வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு தனித்தனி தீ விபத்துகள் பதிவாகின. இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘இரண்டு நிகழ்வுகளிலும் யாருக்கும் உயிா்ச் சேதம்... மேலும் பார்க்க

தில்லியில் திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் இருந்துவந்த திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும். இது அனைவரின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா். மேற்கு தில்லியின் கயாலா ... மேலும் பார்க்க

தில்லியில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்ப அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்தச் சமயத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸாக இருக்கும் என... மேலும் பார்க்க