செய்திகள் :

வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

post image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 20) முடிவடைந்ததால், பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படை வீரா் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 20) முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் தொடா்பான புகாா்களுக்கு 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இன்று(திங்கள்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி !

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,000 குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கர்நாடக அணிகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கா... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தார். பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 31,500 கனஅடியாக திங்கள்கிழமை காலை நீடிக்கிறது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கம்

சென்னை: திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத... மேலும் பார்க்க

மு.க.முத்து மறைவு: ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி

தனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரி... மேலும் பார்க்க