டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், கழுதூரைச் சோ்ந்தவா் ராமசாமி (50). சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்தாராம். கழுதூா் கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ராமசாமி வந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 5 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள உணவகம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவா் இறந்து கிடந்தாா். தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், ராமசாமி சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.