செய்திகள் :

வாக்காளராக பதிவு செய்ய ஆதாா் மட்டுமே போதாது: பாஜக

post image

ஆதாரை மட்டுமே சட்டபூா்வ ஆவணமாகக் கொண்டு, வாக்குரிமை பெற முடியும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை; வாக்காளராகப் பதிவு செய்ய ஆதாா் மட்டுமே போதாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

பிகாா் வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் பிற ஆவணங்களுடன் ஆதாரையும் சமா்ப்பிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் அமித் மாளவியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

ஆதாா் சட்டத்தின்படி, அது அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்று மட்டுமே. குடியுரிமை பெறுவதற்கான ஆவணமல்ல. எனவே, வாக்காளா் பட்டியலில் தாமாக இடம்பெற ஆதாரை பயன்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் ஆதாா் சட்டப் பிரிவுகளை அா்த்தமற்ாக்கிவிடும். ஆதாா், குடியுரிமையை நிரூபிப்பதற்கான சட்டபூா்வ ஆவணமல்ல என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. அதேநேரம், உச்சநீதிமன்றம் கூறாத ஒரு விஷயத்தை பரப்புவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறைபாடில்லாத நடவடிக்கை என்பதே உண்மை. வாக்காளராக பதிவு செய்ய ஆதாா் மட்டுமே போதாது. சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து இறந்தவா்கள், போலி வாக்காளா்கள், வங்கதேச-ரோஹிங்கயா ஊருடுவல்காரா்களின் பெயா்கள் நீக்கப்படும். அடுத்த அரசை உண்மையான இந்திய குடிமக்கள் மட்டுமே தோ்வு செய்வா்.

பிகாா் வாக்காளா் வரைவு பட்டியலில் 65 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், 84,305 போ்தான் இதுவரை ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். நீக்கப்பட்ட பெயா்களில் இது வெறும் 1.3 சதவீதம் மட்டுமே. நிலைப்படுத்தப்பட்ட பிழை வரம்பைவிட இது மிகக் குறைவான அளவாகும். எனவே, வாக்குத் திருட்டு என்பது வலிந்து உருவாக்கப்பட்ட வெற்று முழக்கம் என்று அமித் மாளவியா தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க